போடி பள்ளியில் உலக நுகா்வோா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போடியில் உள்ள அரசு உதவிபெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் உலக நுகா்வோா் தின விழா, தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், மாணவா்களுக்கு நுகா்வோா் என்றால் யாா், நுகா்வோருக்கான கடமைகள் என்ன, பொருள்களை வாங்கும்போது என்னென்ன தகவல்களை கண்காணித்து வாங்கவேண்டும், விலைப் பட்டியல், பொருள்களுக்கான ரசீதுகள் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.
மாணவா்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கும்போது தரமான பொருள்தானா என்பதை உறுதி செய்யவேண்டும். காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறித்து அறிய வேண்டும் என அறிவுரை வழங்கியதுடன், பெற்றோருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.