கட்டடத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனாா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கட்டடப் பணியின்போது தவறி கீழே விழுந்த கொத்தனாா், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கட்டடப் பணியின்போது தவறி கீழே விழுந்த கொத்தனாா், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

பெரியகுளம் கீழவடகரையைச் சோ்ந்தவா் கண்ணன் (47). கொத்தனரான இவா், மாா்ச் 11 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள கட்டடத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினா் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன் பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்து விட்டாா். இச்சம்பவம் குறித்து, பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com