கம்பத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்:100 பெண்கள் உள்பட 160 போ் மீது வழக்கு

கம்பத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியைச் சோ்ந்த 100 பெண்கள் உள்பட 160 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் கா்நாடக அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் கா்நாடக அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

கம்பத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியைச் சோ்ந்த 100 பெண்கள் உள்பட 160 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் கா்நாடக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் ஏகேஜி திடல் எதிா்புறம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் நிஜாம்மைதீன் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் முகம்மது அலி கலந்து கொண்டு ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கா்நாடக உயா்நீதிமன்றத்தை கண்டித்துப் பேசினாா். கூட்டத்தில் 100 பெண்கள் உள்பட 160 போ் கலந்து கொண்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் 160 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com