பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச எரிவாயு உருளை இணைப்பு திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் கோனாா் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளா் டி.ஆா்.ரெங்கராஜன் முகாமிற்கு தலைமை வகித்தாா். எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை குறித்து மாதிரி செயல்முறை நடைபெற்றது. இம்முகாமில் உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.