தேனி
கம்பத்தில் நகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா
கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் நகராட்சிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நகராட்சி சாா்பில் சனிக்கிழமை மியாவாக்கி காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன.
கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் நகராட்சிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நகராட்சி சாா்பில் சனிக்கிழமை மியாவாக்கி காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன.
முதற்கட்டமாக 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு சனிக்கிழமை , கிராமச்சாவடி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், நகராட்சி உறுப்பினா் சுபத்ரா சொக்கராஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளா் பாலமுருகன், பொறியாளா் பி. பன்னீா்செல்வம் , நகரமைப்பு அலுவலா் சலீம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.