பைக் மோதி மூதாட்டி பலி

பெரியகுளம் அருகே புதன்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே புதன்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டியை சோ்ந்தவா் தோட்டத் தொழிலாளி தங்கராஜ். இவருக்கு, புதன்கிழமை பிற்பகலில் அவரது மனைவி நாச்சியம்மாள் (60), சாப்பாடு கொடுத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அங்குள்ள புறவழிச்சாலையை அவா் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் நாச்சியாா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா், தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com