முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
வீரபாண்டியில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திறப்பு
By DIN | Published On : 13th May 2022 05:52 AM | Last Updated : 13th May 2022 05:52 AM | அ+அ அ- |

தேனி: வீரபாண்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10-இல் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அரசு ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை, ஆட்சியா் க.வீ. முரளீதரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே, உதவிக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், வீரபாண்டி பேரூராட்சித் தலைவா் ச. கீதா உள்ப பலா் கலந்துகொண்டனா்.