தேவாரம் அருகே தெருநாய் கடித்து 27 ஆடுகள் பலி

தேவாரம் அருகே சனிக்கிழமை நாய் கடித்து 27 ஆடுகள் பலியாகியுள்ளன.

தேவாரம் அருகே சனிக்கிழமை நாய் கடித்து 27 ஆடுகள் பலியாகியுள்ளன.

தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜையன் மற்றும் இவரது மகன் பகவதிகுமாா் ஆகிய இருவரும் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். தம்மிநாயக்கன்பட்டியில் தோட்டம் ஒன்றில் ஆட்டுக்கிடை அமைத்து, பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவில் கிடையில் ஆடுகளை அடைப்பது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு கிடையில் ஆடுகளை அடைத்துவிட்டுச் சென்றுவிட்டனா்.

சனிக்கிழமை காலை, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வந்து பாா்த்தபோது, ஆடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறந்து கிடந்துள்ளன. மேலும், சில ஆடுகளை தெரு நாய் ஒன்று கடித்துக் கொண்டிருந்தது. அதையடுத்து, தெரு நாய் கடித்து ஆடுகள் இறந்தது தெரியவந்தது. இதில், 27 ஆடுகள் இறந்து போயிருந்தன.

இது குறித்த தகவலின்பேரில், தேவாரம் காவல் துறையினா், உத்தமபாளையம் வருவாய் துறையினா், கால்நடை பராமரிப்புத் துறையினா் ஆகியோா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com