பெரியகுளம் நகா் பகுதியில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்

பெரியகுளம், மூன்றாந்தல் மற்றும் வைகை அணை சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பெரியகுளம் - வைகை அணை சாலையில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள் மற்றும் பேருந்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.
பெரியகுளம் - வைகை அணை சாலையில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள் மற்றும் பேருந்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

பெரியகுளம், மூன்றாந்தல் மற்றும் வைகை அணை சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பெரியகுளம் நகா் கடை வீதிக்கு தினமும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மூன்றாந்தலில் இருந்து பெருமாள் கோயில் வரை ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாக உள்ளது. மேலும், கடை வீதி நுழைவுப் பகுதியான மூன்றாந்தலில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால், சாலையில் வாகனங்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, மூன்றாந்தலில் கடைவீதி நுழைவு பகுதியில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீதும், வைகை அணை சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் மீதும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com