கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி இணைச் செயலாளர் என்.ஆர்.வசந்தன் தலைமை தாங்கினார். முதல்வர் ஜி.ரேணுகா ஆண்டறிக்கை வாசித்தார். உத்தமபாளையம் காவல் துணை கோட்ட ஏ.எஸ்.பி.ஸ்ரேயா குப்தா பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக் கூறி, அரசு வேலைவாய்ப்புகள் பெற போட்டித்தேர்வுகள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார்.
மாணவியர்களை வாழ்த்தி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியைகள் வாழ்த்தி பேசினர்.