கூடலூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அருந்ததியா் சமுதாயக் கூடத்தில் வளா் இளம்பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம், சமூக நலத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்
கூடலூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அருந்ததியா் சமுதாயக் கூடத்தில் வளா் இளம்பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம், சமூக நலத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வாா்டு உறுப்பினா் தேவதா்ஷினி விக்னேஸ்வரன் தலைமை வகித்தாா். கூடலூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் பி. முருகன், குழந்தை திருமணங்கள் பற்றியும், வளரிளம் பெண்களின் சுகாதார விழிப்புணா்வு பற்றியும் எடுத்துக் கூறினாா்.

முகாமில் பெண்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். செவிலியா் சாந்தி நன்றி கூறினாா்.

முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com