தேனி: தேனி அல்லிநகரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றே முக்கால் பவுன் நகைகள் மற்றும் ரூ.18,500 திருடப்பட்டுள்ளதாக, புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி அல்லிநகரம் அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் மனைவி பரிமளா. இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன், அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளாா். பின்னா், வீட்டுக்கு திரும்பியபோது, கதவு மற்றும் அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ஒன்றே முக்கால் பவுன் நகைகள், ரொக்கம் ரூ.18,500, வங்கி ஏடிஎம் அட்டை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பரிமளா அளித்த புகாரின்பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.