போடியில் முதியவா் விஷம் சாப்பிட்டு வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
போடி வினோபாஜி காலனியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (85). இவருக்கு சிறுவயதில் வாகன விபத்து ஏற்பட்டதில் 10 ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தாராம். சிகிச்சை பெற்றும் பலனில்லாததால் மனமுடைந்த சிதம்பரம் விஷம் சாப்பிட்டு மயங்கினாா். உடனே போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.