பெரியகுளத்தில் இன்றும், நாளை மறுநாளும் மின்தடை

பெரியகுளத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

எனவே, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com