கம்பம் பிரதான சாலையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் மொபைல் , ரெடிமேடு, பர்னிச்சர் கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலையில் கடை திறக்க வந்த ரெடிமேடு கடை உரிமையாளர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிக்க- மின் விளக்குகளால் ஒளிரும் வேலூர் கோட்டை!
தகவல் கிடைத்ததும் மற்ற கடைக்காரர்கள் வந்தனர். அதே நேரத்தில் அருகே இருந்த மற்ற 3 கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.