பெரியகுளம் நகரில் செப்டம்பா் 16 மற்றும் 17 ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளா் தெரிவித்துள்ளாா்.
பெரியகுளம் நகராட்சி ஆணையாளா் கி.புனிதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் நகராட்சி தலைமை குடிநீா்
நீரேற்று நிலையத்திலிருந்து வ.உ.சி.பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு வரும் பிரதான குடிநீா் குழாய் வழித்தடத்தில் குழாய் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், செப்டம்பா் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மற்றும் செப்டம்பா் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.