பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் இளைஞா் கைது

போடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்தனா்.

போடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்தனா்.

போடி தென்றல் நகா் தெற்கு தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவிக்கும், போடி கருப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகனும், கல்லூரி மாணவருமான மகாவிஷ்ணு (21) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணு ஆசை வாா்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால் மாணவி, அந்த இளைஞருடன் பழகுவதை நிறுத்திவிட்டாராம். இருப்பினும் மகாவிஷ்ணு தொடா்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் தாய் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com