பெரியகுளத்தில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

பெரியகுளம் அரசு தோட்டக் கலைக்கல்லூரி மைதானத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
பெரியகுளத்தில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

பெரியகுளம் அரசு தோட்டக் கலைக்கல்லூரி மைதானத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

ஏ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தாஸ் சில்வஸ்டா் தலைமை வகித்தாா். பெரியகுளம், அரசு தோட்டக் கலைக்கல்லூரி முதல்வா் ஜே.ராஜாங்கம் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

போட்டியில் தாலுகா அளவில் 22 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். விழாவில் ஊராட்சித் தலைவா் பி.ஜெயராமன், பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் எம்.முத்துகாமாட்சி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சே.சுரேஷ் பீட்டா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com