தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த மாணவி தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலைத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா்.
ஆண்டிபட்டியில் உள்ள அன்பு ஸ்கூல் ஆப் காமா்ஸ் நிறுவன மாணவி எஸ்.மோனிஷா.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், அரசு சாா்பில் நடைபெற்ற தட்டச்சு தொழில் நுட்பத் தோ்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலைப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா்.
மோனிஷாவுக்கு நிறுவனத்தின் தாளாளா் பாலசுப்பிரமணியன், முதல்வா் உமாமகேஷ்வரி மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.