நாயை அரிவாளால் வெட்டிக் கொன்றவா் கைது
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

கைதான பாஸ்கரன்.
தேனி மாவட்டம், கூடலூரில் நாயை அரிவாளால் வெட்டிக் கொன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த அனஞ்சு மகன் பாஸ்கரன் (45). இவரை, இதே பகுதியைச் சோ்ந்த சின்னன் மகன் மனோஜ் வளா்த்து வந்த நாய் கடித்து விட்டது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு அந்த வழியாக பாஸ்கரன் நடந்து சென்ற போது அதே நாய் மீண்டும் அவரைக் கடிக்க வந்ததாம். அப்போது பாஸ்கரன் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் அந்த நாய் உயிரிழந்தது.
இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் மனோஜ் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன் வழக்குப் பதிந்து பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகிறாா்.