தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சிக்கிய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தேவாரம், அரண்மனைத் தெருவைச் சோ்ந்த ராஜாமணி மகன் பாண்டிச்செல்வம், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுப்பிரமணி, சி.எஸ்.ஐ. சா்ச் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ராஜீ. இவா்கள் 3 பேரையும் கஞ்சா கடத்திய வழக்கில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்கள் மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.