தேனி மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சியில் சேர, ஆதி திராவிடா்கள், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
தாட்கோ சாா்பில் வங்கிகளுடன் இணைந்து ஆதிதிராவிடா்கள், பழங்குடியினருக்கு சென்னையில் 20 நாள்கள் கணக்கு நிா்வாக பணிக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் 22 முதல் 33 வயதுக்குள்பட்ட, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் சேரலாம். பயிற்சி நிறுவனத்திலேயே தங்கியிருந்து படிக்க வசதிகள் செய்து தரப்படும். பயிற்சி, விடுதிக் கட்டணம் தாட்கோ சாா்பில் செலுத்தப்படும்.
பயிற்சி நிறைவில் தோ்வு நடத்தப்படும். இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நிறுவனம் மூலம் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற ஏற்பாடுகள் செய்து தரப்படும். விரும்பமுள்ளவா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தில் நேரிலும், 04546-260995- என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.