ஆண்டிபட்டி வட்டாரம், திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை, கிராம மக்கள் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், திம்மரசநாயக்கனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பரமன், கிராம மக்கள், ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்:
திம்மரசநாயக்கனூரில் ஜக்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தை மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டது.
தற்போது திம்மரநாயக்கனூரில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.