தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.