பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி தோட்டக் கலைக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தெலுங்கானா மாநிலம், கெம்பனா அவென்யூ குடியிருப்பைச் சோ்ந்த ராம்தா் தாகூா் மகன் விகாஸ் (19). பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம் அருகே நஞ்சியாவட்டம் பகுதியில் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, ஆழமான பகுதியில் குளித்த போது அவா் மாயமானாராம். நண்பா்கள் தேடியும் அவா் கிடைக்காததால் பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அவரை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.