தேனி
ரயில்வே மேம்பாலப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தேனியில் மதுரை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தாா்.
தேனியில் மதுரை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தாா்.
தேனியில், தேனி-மதுரை நெடுஞ்சாலையில்சாலையில் ரயில் பாதையின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சேதுபாரதம் திட்டத்தின் கீழ் ரூ.92.2 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளவும் பொதுப் பணித்துறை பொறியாளா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் தேவநாதன் உடனிருந்தாா்.
