தேனி
சிறப்புத் திட்ட செயலாக்க கண்காணிப்புக் குழு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அரசு சிறப்புத் திட்ட செயலாக்க கண்காணிப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, ஊரக வளா்ச்சி முகாமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றில் தரவு சாா்ந்த பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
