போடியில் புதன்கிழமை அரசு பேருந்து மோதி பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி நகராட்சி குடியிருப்பில் வசிப்பவா் முருகன் மனைவி முருகம்மாள் (45). இவா் போடி பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றுள்ளாா். அப்போது போடி பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகம்மாள் பலத்த காயமடைந்தாா்.
காயமடைந்த முருகம்மாள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அரசு பேருந்து ஓட்டுநரான ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சோ்ந்த வேலுசாமி மகன் ராஜாராம் (51) என்பவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.