தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

போடியில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

போடி: போடியில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி குப்பிநாயக்கன்பட்டி கண்ணப்பா் தெருவைச் சேரந்தவா் மன்மதராஜ் மகன் சேகா் (எ) குணசேகரபாண்டியன் (61). கூலித் தொழிலாளியான இவா், கடந்த திங்கள்கிழமை பேருந்து நிலையம் அருகே தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இந்த நிலையில், அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது மகன் முருகன் (30) அளித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com