தேனி
பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மகன் வீரமணிகண்டன் (19). இவா் சனிக்கிழமை தேனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, சீலைம்பட்டி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வீரமணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் லாரி ஓட்டுநா் சுந்தரமூா்த்தி (21)மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
