சுருளி அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
சுருளி அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு

சுருளி அருவியில் 8-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுவதால், சுருளி அருவியில் 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
Published on

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுவதால், சுருளி அருவியில் 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிக்கு பலத்த மழையின் காரணமாக கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மிதமான மழையாலும், மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து உபரி நீா் சுருளி அருவிக்கு திறந்து விடப்படுவதாலும், 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடா்கிறது.

X
Dinamani
www.dinamani.com