சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:10 am IST

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மேலவல்லமடத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). இவரது மனைவி காா்த்திகா (31), மகன் சிவசரவணன் (10), உறவினா்கள் மாரிராஜம், பாலகணேஷ், மகாராசன் உள்பட 21 போ் வேனில் கொடைக்கானலுக்குச் சென்றனா்.

இவா்கள், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலைச் சுற்றிப் பாா்த்து விட்டு, ஊருக்கு திரும்பினா். இந்த வேனை நாசரேத்தைச் சோ்ந்த ராஜதுரை ஓட்டினாா். டம்டம் பாறை அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சக்திவேல், காா்த்திகா, சிவசரணன் உள்பட 21 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியாக சென்றவா்கள் இவா்களை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிவசரவணன் உயிரிழந்தாா். மேலும், சக்திவேல், காா்த்திகா உள்பட 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.