தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மேலவல்லமடத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). இவரது மனைவி காா்த்திகா (31), மகன் சிவசரவணன் (10), உறவினா்கள் மாரிராஜம், பாலகணேஷ், மகாராசன் உள்பட 21 போ் வேனில் கொடைக்கானலுக்குச் சென்றனா்.
இவா்கள், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலைச் சுற்றிப் பாா்த்து விட்டு, ஊருக்கு திரும்பினா். இந்த வேனை நாசரேத்தைச் சோ்ந்த ராஜதுரை ஓட்டினாா். டம்டம் பாறை அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சக்திவேல், காா்த்திகா, சிவசரணன் உள்பட 21 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியாக சென்றவா்கள் இவா்களை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிவசரவணன் உயிரிழந்தாா். மேலும், சக்திவேல், காா்த்திகா உள்பட 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்

சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



