தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.
உத்தமபாளையம் வட்டாரத் தலைமை அரசு மருத்துவமனை 1951-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த நோயாளிகள் பயனடைகின்றனா். புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் சராசரியாக 800 போ் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். உள் நோயாளிகள் பிரிவில் 70 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. மேலும், அண்மையில் சுமாா் ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட அவசரச் சிகிச்சை மையமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மருத்துவா்கள் பற்றாக்குறை :
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்18 வகையான மருத்துச் சேவை அளிக்கப்படுகிறது. இங்கு தலைமை மருத்துவரின் கீழ் 12 மருத்துவா்கள், 30 செவிலியா்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தலைமை மருத்துவா் உள்பட 5 மருத்துவா்கள், 15 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக வருபவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனா்.
இதனால் விபத்தில் சிக்கியவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
உத்தமபாளையம் புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் 8 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் தூய்மைப் பணியாளா்கள் மூலமாக சிசிச்சை அளித்தனா்.
எனவே, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

தாமதமாக பணிக்கு வரும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை!

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எல்.எல்.ஏ. ஆய்வு
பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்பு அறை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



