சாலை விபத்தில் ஒருவர் சாவு

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள போத்திரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் இவரும், அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் (35)என்பவரும் இருசக்கர வாகனத்தில் போத்திரெட்டிபட்டியிலிருந்து-சாத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனர்.
சாத்தூர் போக்குவரத்துநகர் அருகே வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த போக்குவரத்து நகரைச் சேர்ந்த வீரமணி (54) என்பவரின் இருசக்கர வாகனம் மீது சுப்புராஜின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் சுப்புராஜ், பின்னால் அமர்ந்து வந்த முனியராஜ், வீரமணி மூவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். இதில் முனியராஜ் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com