ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மற்றொருவரின் தரிசு நிலத்தில் ஆடு மேய்த்தவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மல்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கூ.வேல்சாமி (55). இவர் தனது ஆடுகளை அதே பகுதியைச் சேர்ந்த பா. கண்ணன், பா. சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் வேல்சாமியை கம்பால் தாக்கி காயப்படுத்தினராம்.
இதுகுறித்து மல்லி காவல் நிலையத்தில் வேல்சாமி கொடுத்த புகாரின் பேரில், கண்ணன் மற்றும் சீனிவாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.