பேரூந்திலிருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு

பழையகாயல் அருகே அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
Published on
Updated on
1 min read

பழையகாயல் அருகே அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் சேவியர் (47). இவர் அப் பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் மரிய ரீட்டா (19). இவர் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மரிய பிரான்சிஸ் சேவியர் தனது மகளுடன் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் ஏறினர்.
பேருந்தின் பின்பக்க வாசல் அருகே நின்று கொண்டிருந்த மரிய பிரான்சிஸ் சேவியர் திடீரென ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை சக பயணிகள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com