விருதுநகரில் லாரி மோதி இளைஞர் சாவு

விருதுநகரில் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

விருதுநகரில் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அல்லம்பட்டி ராமன் தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ஆனந்த்குமார் (29). இவர், புதன்கிழமை சைக்கிளில் கம்மாபட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (53) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் ஆனந்த்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரி ஓட்டுநர் குணசேகரனை விருதுநகர் கிழக்கு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com