கஞ்சா விற்பனை: ராஜபாளையத்தில் இருவர் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
  ராஜபாளையம் முடங்கியார் ரோடு அருகே ஊரணி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜேசு தலைமையிலான போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அப்போது  அங்கு கஞ்சா விற்ற தோமையாபுரத்தைச் சேர்ந்த தங்ககொடி (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ராஜபாளையம் சங்கர பாண்டியபுரம் வடக்குத் தெருவில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாலுச்சாமி (75) என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com