விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் புதன்கிழமை மாலை பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான மலட்டாறு மாவரசி அம்மன் கோயில் ஆறு, நீராவி ஆறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் நகர்பகுதியிலும் சுற்றுப்பகுதியிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால, ராஜபாளையம் நகர்பகுதியில் மாலை 6மணிமுதல் மின்தடை ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.