விருதுநகரில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

விருதுநகரில் தென் மண்டல அளவிலான என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

விருதுநகரில் தென் மண்டல அளவிலான என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
  விருதுநகர் வெள்ளைச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 28ஆவது பட்டாலியன் பிரிவு சார்பில் தென்மண்டல அளவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் என்சிசி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
  இதில், துப்பாக்கி சுடுதல், தடை தாண்டுதல், சிறப்பு அணிவகுப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.   இதில், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  ஏற்பாடுகளை ராணுவ தலைமை அதிகாரி கர்னல் தவான், தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை அதிகாரிகள், அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com