ஸ்ரீவில்லிபுத்தூரில் வேன் மோதியதில் தச்சுத் தொழிலாளி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேன் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேன் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார்.
  ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி-திருமலாபுரம் இருளப்பன் நகரைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் மகன் செந்தில்பாண்டி (30). தச்சுத் தொழிலாளியான இவர் புதன்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டத்தரசியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
  அப்போது, பிள்ளையார்நத்தத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்குச் சொந்தமான வேன் மோதியது. இதில், செந்தில்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   
  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com