ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர் மழையால் மானாவாரி விவசாயப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இப் பகுதியில் உள்ள நஞ்சை மற்றும் மானாவரி நிலங்களில் பருவமழையை எதிர்பார்த்து விவசாய பணிகளை மேற்கொள்வர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சோளம், கம்பு, பாசிப்பயிறு, மக்காச்சோளம், செஞ்சோளம் மற்றும் பருத்தியை பயிரிட விளைநிலங்களை தயார் செய்து வருகின்றனர். செம்மண் பூமியில் விவசாயிகள் உழவு செய்து எள், பயறு வகைகளை விதைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.