ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மர்மச் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் வசிக்கும் சுப்பிரமணி மகன் சரவணன் (25). இவரும் இதே பகுதியில் உள்ள வெங்கடாச்சலம் என்பவரின் மகள் சுமித்ரா(21)வும்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துள்ளார்கள்.
பின்னர் கேரளாவில் இருவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோயம்புத்தூருக்கு சுமித்ராவின் அண்ணன் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் சரவணனின் பெற்றோர் வீட்டிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார்கள்.
புதன்கிழமை மாலை சுமித்ராவுடன் மீண்டும் தகராறு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மர்மமான முறையில் சுமித்ரா இறந்துள்ளார். இதனையடுத்து சரவணன் மற்றும் அவரது பெற்றோர் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 இது தொடர்பாக நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com