விளைச்சல் அதிகரிப்பால் மல்லிகைப் பூ விலை சரிவு

விளைச்சல் அதிகரிப்பால் ராஜபாளையம் பகுதியில் மல்லிகைப்பூ விலை மிகவும் சரிவடைந்தது. 

விளைச்சல் அதிகரிப்பால் ராஜபாளையம் பகுதியில் மல்லிகைப்பூ விலை மிகவும் சரிவடைந்தது. 
    பொதுவாக தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலத்தில் மல்லிகைப்பூ விலை வெகுவாக உயரும்.  மல்லிகைப்பூ விலை கிலோவுக்கு ரூ . 600 முதல் ரூ. 800 வரை காணப்படும். இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரிப்பால் ராஜபாளையம் சந்தைக்கு அதிகளவில் வரத்து காணப்பட்டது. 
 400 கிராம் மல்லிகை ரூ .40 முதல் ரூ. 60 வரை ஏலம் போனது. இதனால் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தமிழ் புத்தாண்டில் மல்லிகை பூ மாலை அதிகம் வாங்கிச் சென்றனர். சம்மங்கி, செவ்வந்தி உள்ளிட்ட இதர பூக்களின் வரத்தும் விளைச்சல் அதிகரிப்பால் சந்தைக்கு அதிகம் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com