அரசு மதுபானக் கடை ஊழியரிடம் வழிப்பறி

சிவகாசியில்  அரசு மதுபானக் கடை ஊழியரிடம் வியாழக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. 

சிவகாசியில்  அரசு மதுபானக் கடை ஊழியரிடம் வியாழக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. 
    திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சேர்ந்தவர் குமார் (43). அரசு மதுபானக் கடை ஊழியரான இவர், சிவகாசி-நாரணாபுரம் சாலையில் முனீஸ்வரன் காலனி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். 
 அப்போது, மர்ம நபர்கள் இருவர், குமாரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 300 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். 
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com