காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு , சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி வெள்ளிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
சிவகாசி காவல் நிலையத்தில் 2013ஆம் ஆண்டு ராமசுப்பிரமணி என்பவர் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் இரு குற்ற வழக்குகள் பதிவு செய்தார். இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1இல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கில் சாட்சி அளிக்க வரும்படி நீதிமன்றம் ராமசுப்பிரமணிக்கு 5 முறை சம்மன் அனுப்பியது.
சம்மன் அனுப்பியும் நீதி மன்றத்திற்கு அவர் வராததால், நீதிபதி சந்தானபாண்டியன் அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.