கல்லூரிகள் இடையிலான கபடி: லேடி டோக் கல்லூரி வெற்றி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற மகளிர் கபடிபோட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற மகளிர் கபடிபோட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
  சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்  18 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. 
 இறுதிப் போட்டியில் மதுரை லேடிடோக் கல்லூரி அணியும், மதுரை யாதவா கல்லூரி அணியும் மோதின. இதில் லேடி டோக் கல்லூரி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகி எஸ்.ராஜேஸ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் ரா.சுப்பையா, உதவி இயக்குநர்கள் அய்யல்சாமி, ஆஷாஜெனிபர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com