நகராட்சி ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊழியர்கள் நலச் சங்கத்தின் பொது குழுக் கூட்டம் அதன் முன்னாள் தலைவர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊழியர்கள் நலச் சங்கத்தின் பொது குழுக் கூட்டம் அதன் முன்னாள் தலைவர் திருமூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் புதிய  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக மேலாளர் பாபு, துணை தலைவராக பொறியாளர் ராமலிங்கம், துப்பரவு மேற்பார்வையாளர் முருகேசன், செயலாளராக ஓட்டுநர் கிருஷ்ணன், இணைச் செயலாளர்களாக துப்பரவு மேற்பார்வையாளர் ஜான் அலெக்சாண்டர், வருவாய் உதவியாளர் வசந்தி, பொருளாளராக மின் கம்பியாளர் திருமூர்த்தி, இணை பொருளாளராக வருவாய் உதவியாளர் சண்முகவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு கமிட்டி உறுப்பினர்களாக கணக்கர் காளியம்மாள், உதவியாளர் வெங்கிட சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பிரம்மநாயகம், வருவாய் ஆய்வாளர் காமேஷ்வரன்,  ஓட்டுநர் பழனிக்குமார், அலுவலக உதவியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் அனுரேகா, ஓட்டுநர் திருமலை குமார், பிட்டர் செல்வராஜ், ஓட்டுநர் சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com