அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், உள்பகுதியில் சிமென்டால் கட்டப்பட்ட இருக்கைகளும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்துள்ளன. மேலும், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், யாரும் இதனுள் செல்வதில்லை.
எனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடையோ அல்லது இதை சீரமைத்தோ தரவேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.