மாணவிகளுக்கு பாராட்டு விழா

ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     விழாவுக்கு, பள்ளிச் செயலர் ஷியாம் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, காமராசர் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்ற மாணவி அழகு காளீஸ்வரியையும் கலையருவி அறிவியல் கருத்தரங்கம் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பள்ளிச் செயலர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.
    இதில், பள்ளிக் குழுத் தலைவர் சந்திரசேகரராஜா, ஆலோசகர் வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com